பர்னாலாவுக்கு பதவி நீட்டிப்பு?
டெல்லி:
தமிழக ஆளுநர் பர்னாலாவுக்கு மேலும் ஒரு முறை பதவி நீட்டிப்புவழங்கப்படவுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி தனது ஒப்புதலைத் தந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. தமிழக ஆளுநராக எஸ்.எஸ்.பர்னாலா இருந்துவருகிறார்.தமிழக ஆளுநராக அவர் பதவி வகிப்பது இது இரண்டாவது முறையாகும். முதல்வர்கருணாநிதிக்கு மிகவும் நெருங்கிய நண்பரான பர்னாலா, அதிமுக ஆட்சியில்அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் மரியாதையையும் பெற்றிருந்தார்.
பாரபட்சமின்றி செயல்படும் தன்மை கொண்ட பர்னாலாவின் பதவிக்காலம்முடிவடையவுள்ளது. ஆனால் பர்னாலாவே தொடர்ந்து தமிழக ஆளுநராக நீடிக்கதிமுக விரும்பியது. இதையடுத்து பர்னாலாவுக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கலாம் எனமத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி தரப்பிலிருந்து செய்தி போனது.
இதையடுத்து பர்னாலாவுக்கு மேலும் 5 ஆண்டு காலம் பதவி நீட்டிப்புவழங்கப்படவுள்ளது. இதுதொடர்பான கோப்புகள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுதொடர்பாகஅதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் தவிர ஆந்திரா, அஸ்ஸாம், ஜம்முகாஷ்மீர், அந்தமான் உள்ளிட்ட மேலும்சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.