புதிய அரசு பிளீடர்கள், வழக்கறிஞர்கள் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆட்சி மாறியுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை ஆகியநீதிமன்றங்களுக்கு புதிய அரசு பிளீடர்கள், அரசு வழக்கறிஞர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தலைமை அரசு வழக்கறிஞர் முதல்அரசு பிளீடர் வரையிலான பதவிகளில் கடந்த அதிமுக ஆட்சியின்போதுநியமிக்கப்பட்ட அனைவரும் விலகி விட்டனர்.அரசு தலைமை வழக்கறிஞராக விடுதலை ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களாக பி.எஸ்.ராமன், ராமசாமி,எஸ்.வீரராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உயர்நீதிமன்ற சிறப்பு அரசு பிளீடராக ஹாஜா நஜாமுதீன், சுப்பையா,திருஞானம், வில்சன், ரவி, இளங்கோ, டைட்டஸ் ஜேசுதாஸ், சந்திரசேகரன், சேகர்உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை கிளையின் சிறப்பு அரசு பிளீடராக ஜானகிராமுலு, ஜெசி ஜீவப்பிரியாஆகியோரும், கூடுதல் பிளீடராக பாலசுப்ரமணியன், பாஸ்கரன் ஆகியோர்அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை ஆகியவற்றுக்கான அரசுவழக்கறிஞர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications