சென்னை-மதுரை எண்ணைக் குழாய்: கருணாநிதி தொடங்கி வைக்கிறார்
சென்னை:
ரூ. 498 கோடி செலவில் சென்னைக்கும் மதுரைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ளஎண்ணைக் குழாய் திட்டத்தை முதல்வர் கருணாநிதி வருகிற 26ம் தேதி தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா சென்னைக்கு வந்து முதல்வர்கருணாநிதியை சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெட்ரோலிய பொருட்களை எடுத்துச்செல்வதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சென்னையிலிருந்து மதுரைவரை ரூ. 498 கோடி மதிப்பில் எண்ணைக் குழாயை அமைத்துள்ளது.இந்தத் திட்டம் முடிவடைந்து வருகிற 26ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்துவைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டுதிட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக நேரில் வந்து கருணாநிதியைஅழைத்தேன். எனது அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை தவிர்க்க முடியாதது. அதனால் தான் சிறிதளவுஉயர்த்தியுள்ளோம். ஆனாலும் சமையல் எரிவாயு, மண்ணெண்ணை ஆகியவற்றின்விலையை நாங்கள் உயர்த்தவில்லை.
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் எனநாங்கள் மாநில அரசுகளை வலியுறுத்தவில்லை. அது அவர்களது விருப்பத்திற்குஉட்பட்டது என்றார் தியோரா.
சந்திப்பின்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மாநில அமைச்சர்கள்துரைருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் திரிபாதிஉள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின்விற்பனை வரியில் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் மீதான விற்பனை வரி 34 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாகவும், டீசல்மீதான வரி 23 சதவீதத்திலிருந்து 22.25 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.இதனால் பெட்ரோல் விலையில் 40 காசும், டீசல் விலையில் லிட்டருக்கு 22காசுகளும் குறைந்துள்ளன.
இந்த விலைக் குறைப்பை உடனடியாக ஆந்திர மாநில காங்கிரஸ் அரசுஅமல்படுத்தியுள்ளது. இதேபோல விற்பனை வரியைக் குறைக்க டெல்லி, மகாராஷ்டிரமாநில அரசுகளும் முடிவு செய்துள்ளன. இது தவிர காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்உள்ள அரசுகளும் விற்பனை வரியைக் குறைக்க முடிவு செய்துள்ளன.
தமிழகத்தில் விற்பனை வரியில் குறைப்பு செய்யப்பட மாட்டாது என்று முதல்வர்கருணாநிதி ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications