திருந்திய ரவுடி வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரவுடித்தனத்தைக் கைவிட்டு விட்டு கடந்த 10 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்துவந்தவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் விவேகானந்தன். ஆட்டோ ஓட்டுவதுஉள்ளிட்ட பல்வேறு வேலைகளைச் செய்து வந்தார். முன்னாள் ரவுடியானவிவேகானந்தன் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 10 வழக்குகள் இருந்தன.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரவுடித்தனத்தை விட்டு விட்டு திருந்தி வாழ முடிவுசெய்தார் விவேகானந்தன். அதன்படி சமூக விரோத செயல்களில் ஈடுபடாமல்உழைத்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் விவேகானந்தன் தனது நண்பர்கள் சிலரைப் பார்த்து விட்டுநள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நான்கு பேர் கொண்ட ஒருகும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டித் தள்ளியது.
இதில் நிலை குலைந்த விவேகானந்தன் முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசி வெட்டித்தள்ளினர். இதில் விவேகானந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பெண் விவகாரம் அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம்என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications