For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரேசன் அரிசி கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரேசன் அரிசியைக் கடத்துபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தமிழக அரசுஎச்சரித்துள்ளது. இது தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக ரேசன் கடைகளில் கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதையடுத்து அரிசியை கேரளாவுக்குக்கடத்தும் கும்பல்கள் மீண்டும் அந்த வேலையில் தீவிரமாகியுள்ளன.

கடந்த இரு வாரங்களில் மட்டும் கோவை வழியாக 500 மூட்டை ரேசன் அரிசியை கடத்த முயன்ற 6 பேர் கும்பல்கைது செய்யப்பட்டுள்ளது. 2 லாரிகளும் பறிமுதலாகியுள்ளன.

இதையடுத்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் டிஜிபியான பாலசந்திரன், ஐஜி சேகர் ஆகியோர்போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதில் மாநிலம் முழுவதும் ரேசன் அரிசி விஷயத்தில் தீவிரகண்காணிப்பில் போலீசாரை ஈடுபடுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் ரேசன் அரிசியை கடத்துபவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் ரேசன் கடைக்காரர்கள்ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X