இந்திரா காந்திக்கு கோயில் !!!
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் பண்டிட் பினு சர்மா என்பவர் இந்திரா காந்திக்கு கோயில்கட்ட முடிவு செய்துள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சர்மா பன்டோல் ராவினெஸ் என்ற இடத்தில் இந்தக் கோயிலை கட்ட திட்டமிட்டுள்ளார்.கோயிலை தனது தந்தை யஷ்பால் சர்மாவுக்கு அர்ப்பணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.கோயில் போல்வே வடிவமைக்க ஒரு என்ஜினியரை பினு சர்மா நியமித்துள்ளார். கோயில் கட்டும் செலவுக்காகராணுவத்தில் பணியாற்றிய தனது தந்தைக்கு மாநில அரசு வழங்கிய நிலத்தின் ஒரு பகுதியை விற்கவும் பினு சர்மாமுடிவு எடுத்துள்ளார்.
இது குறித்து பினு சர்மா கூறுகையில்,
இந்திரா காந்தியை சக்தியின் அவதாரமாகவே கருதுகிறேன். அவருக்கு கோயில் கட்டுவது தான் என் லட்சியம்.இக்கோயிலை இந்திரா தாம் என்ற பெயரில் அமைக்க இருக்கிறேன்.
இக்கோயிலின் புனிதத் தன்மை காங்கிரசில் இருக்கும் மாசுக்களை அகற்றிவிடும். மற்ற கோயில்களைப் போலஇந்திரா காந்தி கோயிலிலும் வழிபாடுகள் நடத்தப்படும். இக்கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா ஆகியோரை அழைக்க இருக்கிறேன்.
ராஜஸ்தானில் இருக்கும் காங்கிரசார் சோம்பேறிகளாக உள்ளனர். கட்சியின் வளர்ச்சி மீது அவர்களுக்கு அக்கறைஇல்லை. ஆகையால் தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து இருக்கிறது.
ராஜஸ்தான் காங்கிரசுக்கு புத்துயிருட்டவும், தலித் மக்களும் பெண்களும் தங்கள் உரிமைகளுக்காக குரல்கொடுக்கவும் இந்திரா காந்தி கோயில் புதிய சக்தியை கொடுக்கும் என்று நம்புகிறேன் என்றார் சர்மா.












Click it and Unblock the Notifications