For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

தீர்ப்பு வெளியாகும் நிலையில் உள்ள தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு திடீரெனவருகிற ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000மாவது ஆண்டு பிப்ரவரி மாதம் தர்மபுரி அருகே அதிமுகவினர் நடத்தியவன்முறையில், கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிரோடுதீவைத்துக் கொளுத்தப்பட்டனர்.

இச் சம்பவம் தொடர்பாக 31 அதிமுகவினர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதுகிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், இந்த வழக்கில் அதிமுகவினரைக் காப்பாற்ற ஜெயலலிதா அரசு முயன்றது.இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து இந்த வழக்கைசேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றியது.

வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து விட்டது. விரைவில் தீர்ப்புவெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 2 மாதங்களுக்கு முன்உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.

அதில், அப்போதைய தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பவம் தொடர்பாகஅரசுக்குத் தாக்கல் செய்த அறிக்கை, கோவை வேளாண் பல்கலைக்கழகதுணைவேந்தர் கொடுத்த அறிக்கை ஆகியவற்றின் நகல்களை தங்களுக்கு வழங்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந் நிலையில் சேலம் நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்குவந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள மனு மீது இன்னும் விசாரணை தொடங்கவில்லை.

எனவே பஸ் எரிப்பு வழக்கை வருகிற 29ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X