சுய நிதி கல்லூரி பிஇ: ஜூலையில் நுழைவு தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஜூலை15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தனியார் சுய நிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் தனியார் சுய நிதிப்பொறியியல் கல்லூரிகளில் அரசுக்கான இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது.நுழைவுத் தேர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தின் டிவில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் ஜேப்பியார்கூறுகையில், தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ்வரும் மாணவர் இடங்களுக்கு ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வுநடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வருகிற 22ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதிவரை தரப்படும். சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் அரசுக்கான ஒதுக்கீடு குறித்துசில நாட்களில் முடிவாகி விடும். தமிழக மாணவர்களின் நலன் பாதிக்கப்படாதவகையில் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications