சிறையில் நளினி, முருகன் உண்ணாவிரதம்
வேலூர்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள நளினியும், முருகனும்தங்களது மகள் அரித்ரா, இலங்கையிலிருந்து தமிழகம் வர விசா வழங்க வேண்டும்என்று கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. அவரதுகணவர் முருகன் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருவரும் வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களது மகள் ஆரித்ரா, இலங்கையில் முருகனின் பெற்றோருடன் வசித்துவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஆரித்ரா இலங்கையிலிருந்து தனது தாய்,தந்தையை பார்ப்பதற்காக வேலூர் வந்தார்.
ஆனால் ஆரித்ராவுக்கு அவ்வளவு சீக்கிரம் விசா கிடைத்து விடவில்லை. முருகனும்,நளினியும் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே ஆரித்ராவுக்கு விசாகிடைத்தது.
தாய், தந்தையைப் பார்த்த பின்னர் மீண்டும் கொழும்பு திரும்பினார் ஆரித்ரா.
இந்த நிலையில் மீண்டும் தமிழகம் வர ஆரித்ரா விரும்புகிறார். ஆனால் இம்முறையும்விசா கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து முருகனும், நளினியும் சிறைக்குள்ளேயே காலவரையற்றஉண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications