தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா?: முடிவெடுக்க வேண்டியவர் சோனியா தான்- கிருஷ்ணசாமி
சென்னை:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பது குறித்து சோனியா காந்தி தான் முடிவெடுப்பார் என தமிழககாங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அவரது பேட்டி விவரம்:தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மாநில அளவில் புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்து அனைத்துத்தலைவர்களிடமும் பேசி வருகிறேன். ஒத்த கருத்து எட்டப்பட்டவுடன் மாவட்டத் தலைவர்கள் மூலமாக பட்டியல்தயாரிக்கப்பட்டு மேலிட ஒப்புதல் பெறப்படும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா, ஆட்சியில் பங்கு உண்டா இல்லையா என்பது குறித்த முடிவை அகில இந்தியதலைமை தான் எடுக்க வேண்டும். அதை முடிவு செய்ய வேண்டியது சோனியா காந்தி தான். நாங்கள் அல்ல.தலைமை எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வோம்.
தலைமையின் முடிவை காங்கிரஸ்காரர்கள் எதிர்க்க மாட்டார்கள். அவ்வாறு எதிர்த்துப் பேசுபவர்களும், போஸ்டர்ஒட்டுபவர்களும் உண்மையான காங்கிரஸ்காரர்களே அல்ல. காங்கிரஸ் கட்டுப்பாடு உள்ள கட்சி.
ஆட்சியில் பங்கு தராவிட்டால் அதிருப்து உருவாகும் என் பேச்சுக்கே இடமில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணியில்குழப்பமும் இல்லை. இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலையும் சந்தித்து வெற்றி பெறும்.
உலக அளவில் குரூட் எண்ணெயின் விலை உயர்ந்ததால் தான் பெட்ரோல்-டீசல் விலையை வேறு வழியில்லாம்உயர்த்த வேண்டி வந்தது. இதை குறை சொல்லும் ஜெயலலிதாவின் அதிமுக-பாஜகவோடு கூட்டணி வைத்துமத்தியை ஆண்டபோது 4 முறை பெட்ரோல் விலையை உயர்த்தினார்கள்.
அப்போது ஜெயலலிதா ஏன் போராட்டம் நடத்தவில்லை? மாநிலத்தில் ஏன் பெட்ரோல் மீதான வரியைக்குறைக்கவில்லை? ஜெயலலிதா நடத்தும் போராட்டத்தில் மக்கள் நலன் எதுவும் இல்லை. அது அரசியல்லாபத்துக்காக நடத்தும் ஸ்டண்ட்.
திமுக கூட்டணியில் இருப்பதால் அந்தக் கட்சி சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் காங்கிரசுக்குஇல்லை. திமுக ஆட்சியில் குறை இருந்தால் சுட்டிக் காட்டுவோம். அதற்கு கருணாநிதி நிச்சயம் மதிப்புகொடுப்பார்.
சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை அதிமுகவினர் தாக்கியது வெட்கப்பட வேண்டிய, வேதனையானவிஷயம். இந்த கலாட்டாவையெல்லாம் நிறுத்திவிட்டு மக்களுக்காக அதிமுக உழைக்கலாம்.
மதுரையில் ஸ்டாலின் மீதான தாக்குதலில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications