சென்னையில் காலரா: ஒருவர் பலி
சென்னை:
தென் சென்னையில் உள்ள கொட்டிவாக்கம் பகுதியில் காலரா பரவியுள்ளது. இதில்ஒருவர் பலியானார். 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சிக்குன் குனியா நோயால் தமிழகத்தின் 17 மாவட்டங்கள்பாதிக்கப்பட்டுள்ளன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் காய்ச்சலால்அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தென் சென்னையில் காலரா பரவியுள்ளது. சென்னைதிருவான்மியூரை அடுத்துள்ள கொட்டிவாக்கம் பகுதியில் காலரா தாக்கியுள்ளது.80க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதி காரணமாக பாதிக்கப்பட்டுதண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலராவுக்கு குணசேகர் என்ற கார் டிரைவர் பலியாகியுள்ளார். இதுதவிர குப்பம் என்றபகுதியிலும் காலரா தாக்குதல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. காலரா தாக்குதலைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார பணிகள் துறை இயக்குநர் டாக்டர் இளங்கோதலைமையில் மருத்துவக் குழுக்கள் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
துரைப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட அருகாமைப் பகுதிகளுக்கும்காலரா பரவி விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாந்தி, பேதியால் நோய் பரவாமல் தடுக்க தடுப்புமாத்திரைகளையும் மருத்துவர்கள் குழு வீடு வீடாக விநியோகித்து வருகிறது.
தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்குமாறும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகமருத்துவர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறும் மருத்துவர்கள்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இப்பகுதியில் கடந்த மழை, வெள்ளத்தின்போது தேங்கிய தண்ணீர் இன்னும் கூடவடியாமல் உள்ளது. இந்த அசுத்த நீர் குடிநீருடன் கலந்து அதனால் காலராஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications