சென்னை: ஒரே நாளில் 12 ரவுடிகளுக்கு குண்டாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக சென்னை நகரில் ஒரே நாளில் 12ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நகரில் ரவுடிகள், சமூக விரோதிகளை ஒழித்துக் கட்ட தனிப்படைகள்அமைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 700க்கும் மேற்பட்டரவுடிகளை போலீஸார் பிடித்து உள்ளே தள்ளியுள்ளனர். ஒரு கூலிப் படைத் தலைவன்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 12 ரவுடிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்சிறையில் அடைக்க மாநர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.இவர்கள் அனைவரும் வீடு புகுந்து திருடுவது, பூட்டை உடைத்துத் திருடுவது, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications