சிக்குன் குனியா: சென்னையில் 200 பேர் பாதிப்பு
சென்னை:
தமிழகம் முழுவதும் பரவி வரும் சிக்குன் குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பெருகிவருகிறது. சென்னையில் முகப்பேர் பகுதியில் மட்டும் 200 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிக்-குன்-குனியா வைரசால் ஏற்படக்கூடிய இந் நோய் கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவுகிறது. இந்நோய்வந்தால் தலைவலி, உடல்வலி, மூட்டுவலி போன்ற வலிகள் ஏற்படும்.இந்த நோயால் முதலில் பாதிக்கப்பட்டது சேலம், திருவள்ளூர் மாவட்டங்கள் தான். தமிழகம் முழுவதும் 11,000பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடுமற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது.
இங்குள்ள தோணிறவு குப்பம் கிராமத்தில் அனைத்து குடும்பத்திலும் நோய் தாக்கிதால் கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறி விட்டனர். இப்போது முகப்பேர் கிழக்கு பகுதியில் 11 வது பிளாக்கில் மட்டும் 200 பேர்க்குசிக்குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பலானவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிக்ச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் குறித்தவிழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக பரப்ப சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications