கண்ணிவெடி: 3 இலங்கை போலீஸார் பலி
கொழும்பு:
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 3 போலீஸார் பலியாயினர்.
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல்வெடித்து, இரு தரப்பினரும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.இன்று வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையம் அருகே விடுதலைப்புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 3 போலீஸார் பலியாயினர். மேலும் பலர்காயமடைந்தனர்.
இதற்கிடையே, இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகளின் விமான தளம்சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராணுவம் நடத்திய தாக்குதலில் வன்னி காட்டுப்பகுதியில் உள்ள விடுதலைப்புலிகள் விமான தளம் பலத்த சேதம்அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ் செல்வன் இலங்கை அரசுக்கு கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,
அனுராதபுரம் பஸ் தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. சர்வதேச சமுதாயத்தில் எங்கள் மீது கெட்டபெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இலங்கை அரசே செய்த சதி இது. அமைதி முயற்சிகளை எதிர்க்கும்சக்திகள் இதன் பின்னணியில் உள்ளன.
அவர்கள் முழு யுத்தத்தை தூண்டியுள்ளனர். இப்போது பொதுமக்கள் மீது இலங்கை ராணுவம் விமானம் மூலம்குண்டு வீசி தாக்கி வருகிறது. பொறுப்பற்ற இந்த தாக்குதலை எங்களால் சகித்து கொண்டிருக்க முடியாது. இதற்குதக்க பதிலடி கொடுக்க வேண்டிய நிலை வரும் என எச்சரிக்கை செய்கிறோம்.
இது பற்றி போர் நிறுத்த கண்காணிப்பு குழுவிடம் கூறிவிட்டாம். எங்கள் எச்சரிக்கையை இலங்கை அரசிடம்சொல்லும்படி அவர்களிடம் கேட்டு இருக்கிறோம். இலங்கையில் உள்ள உண்மை நிலை தெரியாமல் சிலநாடுகள்எங்கள் அமைப்பு மீது குறை கூறி இருக்கிறது. இது வருத்தம் அளிக்கிறது என அவர் கூறினார்












Click it and Unblock the Notifications