ஆம்னி பஸ் கட்டணம் மீண்டும் உயர்வு!
சென்னை:
டீசல், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட அடுத்த நாளே ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை அதன்உரிமையாளர்கள் உயர்த்தினர். இந் நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.10ல் இருந்து ரூ.25 வரை உயர்த்தியுள்ளனர். இதனால் சென்னையில் இருந்துபெங்களூக்கு செமி ஸ்லீப்பர் பேருந்தின் கட்டணம் ரூ. 380 ஆகியுள்ளது. ஏசி பஸ் கட்டணம் ரூ. 510ஆகிவிட்டது.இது வார நாட்களில் தான். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போனால் அவர்கள் வைத்தது தான் கட்டணம்என்றாகிவிட்டது.
அதே போல சென்னையில் இருந்து கோவைக்கு இயங்க கூடிய செமி ஸ்லீப்பர் பேருந்து கட்டணம் ரூ.15ம், ஏசிபேருந்துகளில் ரூ.25ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் சென்னையில் அரசு பஸ்களில் மறைமுக கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சள்போர்டு அரசு பஸ்கள் திடிரென எக்ஸ்பிரஸ் பஸ்சாக மாற்றம் செய்யப்பட்டு, கூடுதல் கட்டணம்வசூலிக்கப்படுகிறது.
ஆவடியில் இருந்து பிராட்வே செல்லக் கூடிய (எண்.120) 6 மஞ்சள் போர்டு பஸ்களில், 5 பஸ்கள் எக்ஸ்பிரசாகமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதே போல சூளையில் இருந்து தாம்பரம் செல்லக் கூடிய மஞ்சள் போர்டு (எல்எஸ்எஸ்) பஸ். இப்போதுவண்டலூர் வரை நீட்டித்து எக்ஸ்பிரசாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த போருந்துகளில் கட்டணம்சிறிது உயர்த்தபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications