கண்ணகிக்கு மதுரையிலும் சிலை: திருமா
மதுரை:
கற்புக்கரசி கண்ணகிக்கு மதுரையிலும் சிலை அமைக்க வேண்டும்என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், ஈழத்தமிழர்களுக்காக சென்னையில் அடுத்த மாதம் 8ம் தேதி விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் பேரணி நடத்தவுள்ளோம். அதில் பழ.நெடுமாறன், கி.வீரமணி ஆகியோர்கலந்து கொள்கின்றனர்.அதிமுக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்புவோம்.
ரவுடிகள் என்ற பெயரில் எதிர்க்கட்சியினரை பிடித்து போலீஸார் கைதுசெய்கிறார்கள். பொய் வழக்குகளைப் போட்டு எதிர்க்கட்சியினரைப்பழிவாங்க முயல்கிறார்கள்.
இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்.
காவிரிப் பிரச்சினை குறித்து விவாதித்து தீர்வு காண உடனடியாகஅனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். கர்நாடகஅரசு இந்த விஷயத்தில் முந்திக் கொண்டு விட்டது.
கீரிப்பட்டி, பாப்பாபட்டி, கொட்டக்காச்சியேந்தல், நாட்டாமங்கலம்ஆகிய பஞ்சாயத்துக்களின் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தநடவடிக்கை எடுக்க வேண்டும். இத் தலைவர்களின் பதவிகளை சுழற்சிமுறையில் பொது பிரிவுக்கு மாற்றக் கூடாது.
சென்னை மாநகராட்சி மேயர் பதவியை தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கவேண்டும். மதுரையில் தாழ்த்தப்பட்டோருக்கான வார்டுகளின்எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த வேண்டும். கண்ணகிக்குமதுரையிலும் சிலை அமைக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications