மதானியை பரிசோதிக்க சென்னை மருத்துவ குழு!
கோவை:
உள்ளாட்சித் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர்மதானிக்கு சென்னையிலிருந்து சென்றுள்ள மருத்துவக் குழுவினர்இன்று பரிசோதனைகள் மேற்கொள்கின்றனர்.
தொடர் குண்டு வெடிப்பில் கைதாகியுள்ள மதானிக்கு ஏகப்பட்ட உடல்உபாதைகள் உள்ளன. அவருக்கு முறையான மருத்துவச் சிகிச்சை தரவேண்டும், ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று சமீபத்தில்சென்னைக்கு வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், முதல்வர்கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.இதில் மருத்துவ சிகிச்சை தொடர்பான கோரிக்கை குறித்து பரிவுடன்பரிசீலிக்கப்படும் என கருணாநிதி உறுதியளித்தார். இதைத் தொடர்ந்துமதானிக்கு கோவை சிறையிலேயே சிகிச்சை கொடுப்பதற்கானவாய்ப்புகள் குறித்து தமிழக அரசு சார்பில் சிறைத்துறை டிஐஜிக்குகடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், சென்னையிலிருந்து ஒரு மருத்துவக் குழு கோவைசென்ள்ளது. இக்குழுவில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவும்,கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவும் இணைந்து இன்றுமதானியை பரிசோதிக்க உள்ளனர்.
மதானியின் தற்போதைய உடல் நிலை, அவருக்குத் தேவைப்படும்சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அறிக்கை தயாரித்து அதை அரசுக்குஇக்குழு அனுப்பி வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications