எஸ்.சி.வி. மீது அதிமுக-மதிமுக கூட்டாக புகார்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை மாவட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமனுக்குச்சொந்தமான தமிழ்த்தாய் கேபிள் டிவி நிறுவனத்தை குறி வைத்து சன் டிவி குழுமநிறுவனமான எஸ்.சி.வி. நறுவனம் செயல்படுவதாக கூறி கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் அதிமுக மற்றும்மதிமுக எம்.எல்.ஏக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் தமிழ்த்தாய் விஷன் என்ற கேபிள் டிவி நிறுவனம்நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனுக்குச்சொந்தமானது இந்த நிறுவனம்.

தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில், தமிழ்த்தாய் நிறுவனத்தின் கேபிள் வயர்களைஎஸ்.சி.வி. நிறுவன ஊழியர்கள் போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகளின் உதவியுடன் அறுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்த்தாய் கேபிள் டிவி நிறுவன ஊழியர்கள் மாநகர காவல்துறைஆணையர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் சமீபத்தில் புகார்கொடுத்தனர்.

இந்த நிலையில் மதிமுக சட்டசபைத் தலைவர் கண்ணப்பன் தலைமையில் அதிமுகமற்றும் மதிமுக எம்.எல்.ஏக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல், மாவட்டக்கண்காணிப்பாளர் கரண் சின்ஹா ஆகியோரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

அதில், எஸ்.சி.வி. நிறுவனத்தின் போக்கைத் தடுக்க வேண்டும், அவர்களால்தமிழ்த்தாய் நிறுவன ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, அவர்களுக்குபாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+