ஏஐஐஎம்எஸ்-வேணுகோபாலுக்கு அன்புமணி ஆப்பு
டெல்லி:
![]() |
இட ஒதுக்கீடு போராட்டத்தை மறைமுகமாக தூண்டிவிட்டவர் ஏஐஐஎம்எஸ்இயக்குனர் வேணுகோபால். அவர் அமைச்சர் அன்புமணிக்கும் எதிராகபோராட்டத்தைத் தூண்டிவிட்டார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே போர் வெடித்துள்ளது.
மருத்துவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்க அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.மருத்துவமனை செயல்பாடுகளில் தலையிடுகிறார் என்று வேணுகோபால் குற்றம்சாட்டி வருகிறார்.
ஆனால், இந்த மருத்துவமனையின் நிர்வாகிகளில் ஒருவனாக ஜனாதிபதியால்நியமிக்கப்பட்டவன் நான், அதில் தலையிட எனக்கு முழு உரிமை உண்டு என்றார்அன்புமணி.
இந் நிலையில், சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த வேணுகோபால்,அன்புமணி மீது புகார் சுமத்தி மனு ஒன்றைக் கொடுத்தார். பின்னர் நீண்ட விடுப்பில்சென்று விட்டார். இதையடுத்து அன்புமணியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்துபிரதமர் மன்மோகன் சிங் நேற்று விளக்கம் கேட்டார்.
![]() |
பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த அன்புமணி செய்தியாளர்களிடம்பேசுகையில்,
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் நிர்வாகம் படுமோசமாக உள்ளது. இதை சீரமைக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.
இதன் மூலம் மருத்துவனையின் டீன், இயக்குனர் உள்ளிட்ட அனைவரும் இந்த 3 பேர்கொண்ட குழுவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வருவர். வேணுகோபால் மருத்துவர்போல நடந்து கொள்ளவில்லை.
பக்கா அரசியல்வாதி போல அவர் நடந்து கொள்கிறார். பல முறைகேடுகளுக்குஅவர்தான் காரண கர்த்தா.
இதுகுறித்து பிரதமரிடம் விளக்கினேன் என்றார் அன்புமணி.
வேணுகோபாலுக்கு மருத்துவமனையில் உள்ள பிற்பட்ட பிரிவு மருத்தவர்கள்,ஊழியர்கள் மத்தியிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications