லஞ்சம் கொடுத்து அண்ணா பல்கலையில் சீட் !: துணைவேந்தர் மீது புகார்
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் பல லட்சம் ரூபாயைலஞ்சமாக பெற்றுக் கொண்டு முறைகேடான வகையில் பொறியியல் படிப்புக்கானமாணவர் சேர்க்கைக்கு வழி வகுப்பதாக இந்திய மாணவர் சங்கம் புகார்தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய மாணவர்சங்க தமிழக செயலாளர் செல்வா கூறுகையில்,பொறியியல் மாணவர் சேர்க்கையில் பெரும் முறைகேடுகள் நடப்பதாக உறுதியானதகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.
இந்த விஷயத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பல லட்சம் ரூபாய்கை மாறியுள்ளதாகத் தெரிகிறது.
இதன் மூலம் தகுதியற்ற மாணவர் சேர்க்கைக்கு அவர் வழி வகுத்துள்ளார். இதனால்தகுதியான பல மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆளுனர் கோட்டா, அரசு கோட்டா என்ற பெயரில் 50 மாணவர்களை சேர்க்கநடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் எந்தவிதமான இட ஒதுக்கீட்டுக் கொள்கையும்கடைப்பிடிக்கப்படவில்லை. தகுதி அடிப்படையில் இந்த மாணவர் சேர்க்கைநடைபெறவில்லை.
எனவே உடனடியாக தமிழக அரசு இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தரின் போக்கைக் கண்டித்து வியாழக்கிழமை கண்டனப்பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார் செல்வா.
மேலும் லஞ்சம் கொடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த 50 மாணவர்களின் பட்டியலையும் அவர்வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications