காவிரி நடுவர் மன்றத்தின் பாரபட்சம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கர்நாடகத்திற்கு ஆதரவாக காவிரி நடுவர் மன்ற ஆய்வறிக்கையில் பல பரிந்துரைகள்சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் நடுவர் மன்ற நிபுணர் குழு தயாரித்துள்ளஆய்வறிக்கையின் நகல் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுவை ஆகிய மாநிலஅரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநலங்கள் தங்களது கருத்துக்களை நடுவர்மன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு தற்போது தமிழக அரசின் சார்பில் பதில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், கர்நாடக அரசுக்கு சாதகமாக நடுவர் மன்ற நிபுணர்குழுவின் ஆய்வறிக்கை அமைந்துள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகத்தில் 2வது பருவ சாகுபடியை நிபுணர் குழு நிராகரித்துள்ளது. அதேசமயம்,கர்நாடகத்தில் கபிணி, ஹோரங்கி, ஹேமாவதி ஆகிய பகுதிகளில் நீர் பாசனத்திற்குஅனுமதி தரப்பட்டுள்ளது பாரபட்சமான நடவடிக்கை.

தமிழகத்தில் 4 லட்சம் ஏக்கர் பாசன பகுதி உள்ள நிலையில் அதை வெறும் 90,000ஆக நிபுணர் குழு குறைத்துக் கூறியுள்ளது நியாயமற்றது.

கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தமிழகத்தில் 1.37 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெற்று வருகிறது. ஆனால் இதை பயனீட்டுத் திட்டத்தில் சேர்க்க நிபுணர் குழுமறுத்துள்ளது.

அதேசமயம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் வெறும் திட்ட அளவில் மட்டுமே உள்ளபகுதிகளை பரிந்துரையில் சேர்த்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்று தமிழகஅரசு தனது பதிலில் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+