தண்டவாளத்தில் மின்சாரம்; பயணிகள் ஷாக்
சென்னை:
சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்ததால் பயணிகளிடையேபெரும் பீதி ஏற்பட்டது.
இன்று காலை ஒன்பதே கால் மணியளவில் கிண்டி ரயில் நிலையத்தில் பல பயணிகள்தண்டவாளத்தை நடந்து கடந்து கொண்டிருந்தனர். அப்போது தண்டவாளத்தில் கால்வைத்த சிலருக்கு சுருக்கென்று ஷாக் அடித்துள்ளது.வெயிலில் தண்டவாளம் சுடுவதாக நினைத்த சிலர் அதைப் பொருட்படுத்தாமல்தண்டவாளத்தில் ஏறி நடக்க முயன்றனர். அப்போது மின்சார ஷாக் அடித்து அவர்கள்கீழே விழுந்தனர்.
இதையடுத்து தண்டவாளத்தில் மின்சாரம் பாய்வதாக பயணிகளுக்கு சந்தேகம்ஏற்பட்டது. உடனடிாயக ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் போனது. அவர்கள்தொழில்நுட்ப நிபுணர்களை வரவழைத்து ஆராய்ந்தனர்.
அந்த பரிசோதனையில், பூமிக்கு அடியில் செல்லும் எர்த் வயர்கள், தண்டவாளத்தில்உரசியதால் மின்சார ஷாக் போன்ற அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மற்றபடி மின்சாரம்பாயவில்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தினர்.
உரசிய வயர்கள் சரி செய்யப்பட்டன. இந்தப் பணி காரணமாக வழக்கமாக மின்சாரரயில்கள் செல்லும் பாதையில் சுமார் 1 மணி நேரம் ரயில்கள் இயக்கப்படவில்லை.மற்ற ரயில்கள் இயக்கப்படும் மெயின் லைனில் ரயில்கள் இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications