உவமைக் கவிஞர் சுரதா மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உவமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்ட கவிஞர் சுரதா இன்று அதிகாலைசென்னையில் மரணமடைந்தார்.

பாவேந்தர் பாரதிதாசனின் தீவிர சிஷ்யர்களில் ஒருவர் சுரதா. இதன் காரணமாகபாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்ற பெயருடன் தாசன் என்பதையும்சேர்த்து, சுருக்கி தனது பெயராக சுரதா என்று வைத்துக் கொண்டார்.

Karunanithi and Vairamuthu with suratha family
1921ம் ஆண்டு பிறந்த சுரதா, எண்ணற்ற நூல்களையும், கவிதைகளையும்எழுதியுள்ளார். உவமைக் கவிதைகளில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால் உவமைக்கவிஞர் என்று அழைக்கப்பட்டர்.

சுரதா சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சைசெலவுக்கு முதல்வர் கருணாநிதி ரூ. 50,000 ரூபாய் நிதியுதவியும் அளித்திருந்தார்.

இந் நிலையில் இன்று அதிகாலை சுரதா மரணமடைந்தார். தகவல் அறிந்ததும்கே.கே.நகரில் உள்ள சுரதாவின் வீட்டுக்குச் சென்ற கருணாநிதி அவரது உடலுக்குமலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் சுரதாவுக்கு அஞ்சலிசெலுத்தினர்.

சுரதாவுக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்றுநடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+