சிபிஎம் வெற்றியை எதிர்த்து மதிமுக வழக்கு
சென்னை:
மதுரை கிழக்கு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறனின்வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுகசார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர் பூமிநாதன் வழக்குதொடர்ந்துள்ளார்.
சமீபத்தில் தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்மாறனும், மதிமுக சார்பில் பூமிநாதனும்போட்டியிட்டனர்.இதில் வெறும் 57 வாக்குகள் வித்தியாசத்தில் நன்மாறன் வெற்றி பெற்றார். மின்னணுவாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின்படி பூமிநாதனே முன்னணியில்இருந்தார். ஆனால் தபால் ஓட்டுக்களில் பெரும்பாலானவை நன்மாறனுக்கு சாதகமாகஇருந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில், நன்மாறன் வெற்றியை எதிர்த்து பூமிநாதன் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில்,
மதுரை கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது விதிமுறைகளுக்கு மாறாகமுதலில் தபால் ஓட்டுக்களை எண்ணவில்லை. அதற்குப் பதில், மின்னணுஇயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
கடைசியாக எண்ணப்பட்ட தபால் ஓட்டுக்களில் 121 ஒட்டுக்கள் செல்லாதவையாகும்.இந்த வாக்கு எண்ணிக்கை நன்மாறனுக்கு சாதகமாக நடத்தப்பட்டது. எனவேநன்மாறன் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்பூமிநாதன்.












Click it and Unblock the Notifications