திடீர் கடல் கொந்தளிப்பு-தப்பிய 700 மீனவர்கள்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் அருகே கடல் திடீரென கொந்தளிப்பில் சிக்கிய 700க்கும் மேற்பட்டமீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதில் 7 படகுகள் மூழ்கி விட்டன. 2 பேர் லேசான காயமடைந்தனர்.

ராமேஸ்வரத்த்ை சேர்ந்த 700 மீனவர்கள் கடலுக்குள் விசைப் படகுகளில் மீன் பிடிக்கச்சென்றனர். நடுக் கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென காற்றுபலமாக வீசியது. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதில் சிக்கி படகுகள் அங்கும் இங்குமாக அலை பாய்ந்தன. இதைத் தொடர்ந்துமீனவர்கள் கடுமையாகப் போராடி கரைக்குத் திரும்பினர். அப்போது 7 விசைப்படகுகள் மூழ்கி விட்டன. அதில் இருந்த மீனவர்கள் மற்ற விசைப் படகுகளில் ஏறிஉயிர் தப்பினர்.

இந்தப் போராட்டத்தில் 2 மீனவர்கள் லேசான காயம் அடைந்தனர். கரைக்குத்திரும்பிய மீனவர்கள் கடலில் மூழ்கிய விசைப் படகுகளை மீட்க முயற்சித்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+