கருவிழி இல்லாத குழந்தை-அரசு தொட்டிலில்..
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
![]() |
தர்மபுரி மாவட்டம் போடூர் இருளர் காலனியைச் சேர்ந்த முனுசாமி, மாதம்மாள் தம்பதியருக்கு 3 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. சுள்ளி விறகு விற்று குடும்பம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 20ம் தேதி சின்னாற்று வனப்பகுதியில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தபோது மாதம்மாளுக்கு பிரசவ வலிஏற்பட்டது. உடன் சென்ற பெண்கள் உதவியுடன் பெண் குழந்தையை பெற்றார்.
ஆனால் கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் சதைகள் மூடி காணப்பட்டது. குழந்தையை பென்னாகரம் தனியார்மருத்துவமனையில் காட்டினர். அங்கு பரிசோதித்து பார்த்ததில், சதையால் மூடிய குழந்தையின் கண் பகுதியில் கருவிழிகள் இல்லாதது தெரியவந்தது.
பெற்றோர்கள் மிகவும் சோகமடைந்தனர். பார்வையற்ற குழந்தையை வளர்க்க பெற்றோர் சிரமப்பட்டதால், கிரமாசெவியியர்கள் அறிவுரைப்படி தர்மபுரி அரசுத் தொட்டிலில் சேர்த்தனர்.













Click it and Unblock the Notifications