ஜனனியிடம் சிபிசிஐடி எஸ்.பி. விசாரணை
மதுரை:
![]() |
கஞ்சா வழக்கில் சிக்கிய ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 1.40 கோடியில் ரூ.30 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டு இருந்தது. இது குறித்து வருமானவரித்துறையினர் போலீஸாரிடம் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ஜனனி, ரமீஜா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்துவிட்டு மதுரை வீட்டுக்குத் திரும்பியபோது போலீசாரிடம் சிக்கினர்.
அவர்களை எங்கும் போகத விடாமல் போலீசார் வீட்டைச் சுற்றி கண்காணித்துவருகின்றனர்.
இந் நிலையில் கள்ள நோட்டு என்று சந்தேகப்படும் பணத்தின் எண்களை நகல் எடுத்துஅதை ரிசர்வ் வங்கிக்கு போலீஸார் அனுப்பியுள்ளனர். பணத் தாள்களின் வரிசைஎண்ணில் குளறுபடி உள்ளதா என்பது குறித்துத் தெரிவிக்கும்படி ரிசர்வ் வங்கியைக்கேட்டுக் கொண்டுள்ளனர்.
![]() |
அங்கு இருவரிடமும் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இந்தவிசாரணையின்போது ஜனனியின் வழக்கறிஞர்களும் உடன் இருந்தனர். சுமார் 1 மணிநேரம் இந்த விசாரணை நடந்தது.
ஜனனியின் வீட்டை 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இதனால் கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் ஜனனி உள்ளார்.
ஜனனியை மருத்துவமனையில் அட்மிட் செய்யுமாறு முக்கியப் பிரமுகர் யோசனைசொன்னதையடுத்து அவரை மேலூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றார் ரமீஜா. ஆனால், தேவையில்லாமல் சிக்கலில் மாட்ட விரும்பாதமருத்துமனை நிர்வாகம் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டது.














Click it and Unblock the Notifications