கேரள மணல் ஓவியருக்கு ஜெ ரூ. 5 லட்சம்!!
சென்னை:
தூரிகை இல்லாமல், பெயிண்ட் இல்லாமல் வெறும் மணலை மட்டுமே பயன்படுத்திஉருவாக்கப்பட்ட தனது ஓவியத்தை அதிமுக பொதுச் செயலாளர் வியந்து பார்த்துரசித்தார். இந்த ஓவியத்தை உருவாக்கிய கேரள ஓவியர் பாபு எடக்குன்னிக்கு ரூ. 5லட்சம் பரிசளித்தார்.
![]() |
இதை எப்படி வரைந்தீர்கள் என்று எடக்குன்னியிடம் கேட்டபோது, தமிழகத்திலிருந்துசேகரித்த மணலைக் கொண்டு இந்த ஓவியத்தை வரைந்ததாக எடக்குன்னிதெரிவித்தார்.
அப்படியா என்று ஆச்சரியப்பட்ட ஜெயலலிதா அதுகுறித்து விவரம் கேட்டார். வெறும்மணலை மட்டுமே வைத்து இந்த ஓவியத்தை வரைந்தேன். இதற்காக பிரஷ், பெயின்ட்என எதையுமே நான் பயன்படுத்தவில்லை.
முழுக்க முழுக்க மணலால் ஆனது இந்த ஓவியம் என்று கூறி ஜெயலலிதாவைவியப்பில் ஆழ்த்தினார். இதேபோல குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கிருஷ்ணர்ஆகியோரது ஓவியங்களையும் ஏற்கனவே படைத்திருப்பதாக எடக்குன்னிஜெயலலிதாவிடம் தெரிவித்தார்.
அவரது திறமையை பாராட்டிய ஜெயலலிதா அருமையான ஓவியத்தைப்படைத்ததற்காக அவருக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து ரூ. 5 லட்சம் பரிசுவழங்கிப் பாராட்டினார்.













Click it and Unblock the Notifications