நில மோசடி- 6 ஸ்டெர்லிங் அலுவலர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நில மோசடி வழக்கில் தொழில் அதிபர் சிவசங்கரனின் ஸ்டெர்லிங் நிறுவத்தைச் சேர்ந்த அலுவலர்கள் 6 பேர்கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக ஈரோடு ஏ.என் சண்முகம் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரைத் தொடர்ந்து இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சண்முகம் தந்த புகாரில்,

சென்னை அய்யப்பன் தாங்கலில் எனக்கு 2.43 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகள் கட்டி விற்கும் திட்டத்தைசெயல்படுத்தலாம் என்று ஸ்டெர்லிங் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் என்னிடம் கேட்டார்.

என் நிலத்தின் அருகே நிலம் வைத்துள்ள 17 பேரிடமும் இதேபோல் கூறினார். இதன்பின் அவர் வீடுகள் கட்டசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) அனுமதி பெற வேண்டும் அதற்காக திறந்த வெளி நிலம்ஒதுக்க சிஎம்டிஏவுக்கு நிலம் தானமாக கொடுக்க வேண்டியுள்ளது.

எனவே நீங்கள் அனைவரும் நிலங்களின் மீது எனக்கு பவர் தந்தால் நானே தானப்பத்திரம் கொடுத்து விடுகிறேன்என்றார். அதை நம்பி சிவசங்கரனுக்கு நாங்கள் பவர் கொடுத்தோம்.

நான் 1.05 ஏக்கர் நிலத்தை மட்டும் கொடுத்தேன். இதன்பின், இத்திட்டம் தாமதமானதால், அந்த நிலத்தை என்மகன் செந்திலுக்கு மாற்றிக்கொடுக்க முடிவு செய்தேன்.

அதற்காக கடந்த மார்ச் 17ம் தேதி அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முயற்சித்தேன். ஆனால் மார்ச் 13ம்தேதியே அந்த நிலத்தை சிவசங்கர் தனது நிறுவனத்துக்கு நான் விற்பனை செய்து விட்டதாக போலிஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்துவிட்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் புகாரில் சண்முகம் கூறியிருந்தார்.

இது பற்றி விசாரிக்க துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த போலீசார் ஸ்டெர்லிங்நிறுவன அலுவலர்கள் வாசுதேவன் (46), ரத்தினக்குமார் (43), சிவக்குமார் (50), கருணாகரன் (39), சக்கரவர்த்தி(43) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

பின்னர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+