ஏன் இந்த நாடகம்? ஜெயா கேள்வி
சென்னை:
ஸ்டாலினை கத்தியால் குத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் நம்பக் கூடியதாகவே இல்லை என முன்னாள்முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் பேட்டி:தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. நல்ல அதிகாரிகள் பழிவாங்கப்பட்டுள்ளனர்.அதிகாரிகள் மாற்றப்படும் விஷயத்தில் கூட பேரம் நடப்பதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு விஷயத்தில் கருணாநிதியோடு என்னை ஒப்பிடக் கூடாது. எனது வீட்டுக்கு வருபவர்கள், உங்களுக்குபாதுகாப்பு போதிய அளவு இல்லையே என்று ஆதங்கப்படுகின்றனர்.
முதல்வர் கருணாநிதிக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டிஎன்எல்எப், டிஎன்ஆர்டி, விடுதலைப்புலிகள் இயக்கங்களுக்கு அவர் வேண்டியவர். பயங்கரவாத, தீவரவாத இயக்கங்களை இருப்புக் கரம் கொண்டுஒடுக்கிய எனக்குத்தான் உண்மையிலேயே அச்சுறுத்தல் உள்ளது
ஸ்டாலினை கத்தியால் குத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் நம்பக்கூடியதாகவே இல்லை. மக்கள் எள்ளிநகையாடுகிறார்கள். சம்பவமே நடை பெறாதபோது என்ன விசாரணை வேண்டிக் கிடக்கிறது. ஸ்டாலினுக்கு இசட்பிரிவு பாதுகாப்பு கொடுக்க விரும்பினால் நேரடியாகவே கொடுத்திருக்லாம். இந்த நாடகமே தேவையில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கூட்டணி நீடிக்கும், எங்கள் அணியில் புதிய கட்சி இணைவது குறித்துபரிசீலிக்கப்படும்.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு ஏதும் என்னுடைய ஆட்சி காலத்தில்நடக்கவில்லை. எந்த ஊழலும் நடைபெறவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.அராஜகம் தலைவிரித்தாடுகிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
போலீஸ் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்தால் புகாரை பதிவு செய்வதில்லை. ஆளும் கடச்சிக்காரர்களுக்குஆதரவாகப் பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள் போலீஸார் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications