For Quick Alerts
For Daily Alerts
Just In
அமைச்சர் நேருவின் வெற்றியை எதிர்த்து வழக்கு
சென்னை:
திருச்சி 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள போக்குவரத்து அமைச்சர்கே.என்.நேருவின் வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மதுரை கிழக்கு, கோவை மேற்கு, சிங்காநல்லூர், நத்தம், மேட்டுப்பாளையம்,தொட்டியம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை எதிர்த்துஅவர்களிடம் சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள், சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த நிலையில் திருச்சி 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று போக்குவரத்துஅமைச்சராகியுள்ள கே.என்.நேருவின் வெற்றியை எதிர்த்து விக்டர் என்பவர் வழக்குதொடர்ந்துள்ளார்.
இவர் திருச்சி 2 தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி தேர்தல் அதிகாரிவிக்டரின் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார்.
இதுதொடர்பாக விக்டர் தாக்கல் செய்துள்ள மனுவில், தேர்தலை ரத்து செய்து விட்டுமீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
Comments
Story first published: Friday, June 23, 2006, 5:30 [IST]