அரிசியில் முறைகேடு-ஜெவுக்கு அமைச்சர் சவால்
ஈரோடு:
ரேஷன் கடைகளில் கிலோ அரிசி 2 ரூபாய்க்குத் தான் வழங்கப்படுகிறது. 5 ரூபாய்க்குவழங்கப்படுவதாக ஜெயலலிதா சொல்வதில் உண்மை இல்லை. இந்தப் புகாரை கூறும்ஜெயலலிதா அதை நிரூபிக்கத் தயாரா என்று உணவுத் துறை அமைச்சர் ஏ.வ. வேலுகூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் வேலு பேசுகையில், பசி, பட்டினியால் தமிழகமக்கள் ஜெயலலிதா ஆட்சியைப் போல எலிக் கறி சாப்பிட்டு விடும் அவல நிலைஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும்திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது.இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம்வெற்றி பெற்றதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி அடைந்த ஜெயலலிதா 5 ரூபாய்க்குஅரிசி விற்கப்படுவதாக பொய்யான புகாரைக் கூறியுள்ளார்.
மேலும் அரசியல் கட்சிப் பிரகர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும்கூறியுள்ளார். முதல்வர் பதவியை வகித்துள்ள அவர், எந்த இடத்தில் குற்றம்நடக்கிறது, யார் பொறுப்பு என்பதைத் தெளிவாகச் சொல்லாமல் சாதாரண நபரைப்போல குற்றம் சாட்டுவது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல.
எங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.உண்மையில் அப்படி நடப்பது தெரிய வந்தால் நிச்சயமாக முதல்வர் கருணாநிதி கடும்நடவடிக்கை எடுப்பார் என்றார் வேலு.