தமிழகத்தில் மணலுக்கு கடும் தட்டுப்பாடு!
சென்னை:
தமிழகத்தில் மணல் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கைகளை எடுக்க முதல்வர்கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பல கட்டுப்பாடுகளை அரசுவகுத்துள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் மணல் தட்டுப்பாடு, திருட்டுத்தனமாக மணல் எடுக்கும்பிரச்சினை குறித்து விவாதிக்க கருணாநிதி தலைமையில் அவசர ஆலோசனைநடத்தப்பட்டது. இக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கட்டுமானப் பணிக்குத் தேவைப்படும் மணல் நியாயமான விலையில்வழங்குவதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மணல் குவாரிகளை தொடர்ந்து தமிழக அரசின் பொதுப் பணித்துறையே நடத்துவதுஎன்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் பணித்துறையின் விதிமுறைகளின்படி கூடுதல் குவாரிகளைக் கண்டறிந்துமணல் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மணல் குவாரிகள் தொடங்குவதற்கான ஒப்புதல் பெறுவதில் காலதாமதம்ஏற்படுவதைத் தவிர்க்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கே அந்த அதிகாரத்தைவழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது லாரிகளில் மணல் எடுத்துச் செல்லும் நேரமான காலை 8 மணி முதல் மாலை6 மணி வரை என்பதை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மாற்றவும்திட்டமிடப்பட்டுள்ளது.
திருட்டுத்தனமாக மணல் எடுப்பதைத் தடுக்க காவல், வருவாய், பொதுப் பணித்துறைமற்றும் கனிம அலுவலர்கள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு இரவு நேரங்களில்சோதனைகள் நடத்தப்படும்.
மணல் குவாரி நடத்தும் இடங்களில் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கும்,அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும், பணியாளர்களைநியமிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள்கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
இரண்டாவது விற்பனை செய்யும் இடங்களில் மறு விற்பனை வரி செலுத்தப்படுகிறதாஎன்பதையும் வணிக வரித்துறையினர் சரி பார்க்கலாம்.
இந்த நடவடிக்கைகள் மூலம் சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் மணல்தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் மக்களுக்குக் கிடைக்கும் வகையில்அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க மதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.