For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய வீராணம் திட்டத்தில் ஊழல்?-விரைவில் கமிஷன்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்

புதிய வீராணம் திட்டத்தில் ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளது. அது குறித்து விசாரிக்கவும் கமிஷன் அமைக்கப்படும்என உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதி தரப்பட்ட நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கசமீபத்தில் கமிஷன் அமைக்கப்பட்டது.

இந் நிலையில் காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின்,

புழல், பூண்டி, சோழாவரம் ஆகிய நீர்த் தேக்கங்களில் போதிய அளவுக்கு நீர் உள்ளது. இதனால் சென்னைக்குஅடுத்த 6 மாதத்துக்கு தண்ணீர் பிரச்சனை இல்லாமல் சமாளித்துவிட முடியும்.

ஆலந்தூர் நகராட்சிக்கு இப்போது மெட்ரோ வாட்டர் வழங்கப்படுகிறது. விரைவில் தாம்பரம், பல்லாவரம்நகராட்சிப் பகுதிகளுக்கும் மெட்ரோ வாட்டர் வழங்கப்படும்.

புதிய வீராணம் திட்டத்தில் ஏகத்துக்கும் ஊழல் செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக நானும் முன்னாள்முதல்வரும் அறிக்கைகள் விட்டு வந்தோம். அந்த ஊழல் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க அரசு யோசித்துவருகிறது என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X