புதுவை உள்ளாட்சி தேர்தல்-இன்று வாக்குபதிவு
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்:
புதுவை மாநிலத்தில் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்படும் உள்ளாட்சித்தேர்தலிலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது.
புதுவை மாநித்தில் கடந்த 38 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலேநடைபெறவில்லை. இந்த நிலையில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்நடத்தபபடும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதைத் தொடர்ந்து இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில்காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கும், திருநள்ளாறு, கோட்டுச்சேரிஉள்ளிட்ட 5 கம்யூன் பஞ்சாயத்துதக்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 38 ஆண்டுகளுக்குப் பின்னர்தேர்தல் நடப்பதால் பொதுமக்கள் மிகுந்த ஆர்வடன் வாக்களித்தனர்.
2வது கட்டமாக புதுவை, உழவர்கரை நகராட்சிகளுக்கு 27ம் தேதி வாக்குப்பதிவுநடைபெறும். மண்ணாடிப்பட்டு, அரியாங்குப்பம் பஞ்சாயத்துக்களுக்கு 3வதுகட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும்.












Click it and Unblock the Notifications