கன்னியாகுமரியில் தொடர்ந்து கடல் சீற்றம்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடல் பகுதிகளில் இன்றும் கடல் சீற்றம் அதிகமாககாணப்படுவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.இதனால் கடலும் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுனாமிக்கு பிறகு அவ்வப்போதுகடல் சீற்றம் ஏற்பட்டு வருகிறது.இருப்பினும் கடந்த சில நாட்களாக இம் மாவட்டத்தில் கடுமையாக இருக்கிறது.
மணக்குடி, ராஜாக்கமங்கலம், வல்லவிளை உள்ளிட்ட பல கிராமங்களில் கடல் சீற்றம்அதிகமாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் போகவில்லை. படகுகளை பாதுகாக்கமீனவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாருஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications