பஸ் மோதி 30 ஆடுகள் பலி; 100 படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பல்லடம்:
பல்லடம் அருகே சாலையின் குறுக்கே சென்ற ஆட்டுக் கூட்டத்தில் புகுந்த சுற்றுலாபேருந்து, 30 ஆடுகளைப் பலி கொண்டது. 100க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம்அடைந்தன.
பல்லடம் அருகே உள்ள பள்ளப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன்.இவர் தனக்குச் சொந்தமான 500 ஆடுகளுடன் மேய்ச்சலுக்காக பெரியநாயக்கன்பாளையத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஆடுகள் திடீரென சாலையின் குறுக்கே புகுந்தன.
அந்த சமயம் வேகமாக வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று ஆட்டுக்கூட்டத்தில் பாய்ந்தது.
இதில் பஸ்சில் சிக்கி 30 ஆடுகள் பலியாயின. 100க்கும் மேற்பட்ட ஆடுகளுக்குகால்கள் ஒடிந்து படுகாயமடைந்தன.
இந்த விபத்தால் தனக்கு ரூ. 60,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆட்டுஉரிமையாளர் ஆண்டியப்பன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications