சிறுவன் நரபலி: சாமியார் உள்பட 4 பேர் கைது
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே 4 வயது சிறுவனை நரபலி கொடுத்தபோலிச் சாமியார் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் அருகே உள்ளது அரசடிக்குப்பம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்சக்திவேல். இவர் ஒரு விவசாயி. இவரது மகன் சதீஷ்குமார். இவரது பக்கத்து வீட்டில்வசிப்பவர் ராஜவேல். இவரும் விவசாயிதான்.ராஜவேலு புதிதாக ஒரு வீடு கட்டத் தொடங்கினார். ஆனால் வேலை பாதியில் நின்றுவிட்டது. மேலும் வீட்டு மனையில் ஒரு மண்டை ஓடு கிடைத்தது. இதனால் அவர்பயந்து போனார்.
மேலும், அவரது 5 மகன்களும் திருமண வயதை எட்டியிருந்தும் யாருக்கும்திருமணம் நடக்காமல் இழுத்துக் கொண்டு வந்தது.
இதனால் சோகமடைந்த ராஜவேலு, சேத்தியாத்தோப்பில் உள்ள கதிரேசன் சாமியாரைஅணுகி தனது பிரச்சினைகளைக் கூறியுள்ளார்.
அப்போது கதிரேசன், அங்கஹீனம் இல்லாத தலைச்சன் ஆண் குழந்தையைபலிகொடுத்தால் அனைத்துப் பிரச்சினைகளும் தீரும் என்று ராஜவேலுவிடம்ஆலோசனை கூறியுள்ளார்.
இதையடுத்து தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் சக்திவேலின் மூத்த மகன் சதீஷ்குமாரைபலி கொடுக்க ராஜவேலு முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்தசதீஷ்குமாரை, வாயைப் பொத்தி ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டினார்.
பின்னர் அருகில் உள்ள முந்திரித் தோப்புக்குக் கொண்டு சென்றார். சாமியார்கதிரேசனுக்குத் தகவல் கொடுத்து அவரையும் அங்கு வரச் சொன்னார்.
அங்கு சதீஷ்குமாரை இந்தக் கொடூரக் கும்பல் நரபலி கொடுத்தது. சதீஷ்குமாரின்ரத்தத்தை ராஜவேலு புதிதாக கட்டி வரும் வீட்டுக்குக் கொண்டு வந்து வீடு பூராவும்தெளித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சதீஷ்குமாரின் உடலை முந்திரித்தோப்புக்குள்ளேயே போட்டு விட்டனர்.
சிறுவன் ஒருவன் பிணமாகக் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸுக்குத்தகவல் கொடுத்தனர். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப்சிங் பேடிக்கும் புகார்மனுக்கள பறந்தன.
பண்ருட்டி டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணைநடத்தினார். இதைத் தொடர்ந்து ராஜவேலு, அவரது மனைவி வசந்தா, மகன்கிருஷ்ணராஜ், சாமியார் கதிரேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
வீடடுப் பிரச்சினை, திருமணப்பிரச்சினை தீர சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கும்சம்பவம் கடலூர் மாவட்டத்தையே உலுக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications