என்.எல்.சி: பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை:
என்எல்சி நிறுவனத்தின் 10 சதவீத பங்ககுளை தனியாருக்கு விடும் முடிவை மத்தியஅரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நெய்வேலி அணல் மின் நிலைய நிறுவனத்தின் 10 சதவீதப் பங்கினை தனியாருக்குவிட்டுத் தருவது தொடர்பாக எழுந்துள்ள எதிர்க்கட்சிகளின் கருத்துக்களைபுறக்கணித்து விட முடியாது. அலட்சியப் படுத்தக் கூடாது.
ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட குறைந்தபட்ச செயல் திட்டத்திலிருந்து விலகிச்செல்வதற்கு எந்தக் காரணம் கூறப்பட்டாலும், அது முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டகொள்கையைக் கடைப்பிடிக்கும் உறுதிப் பாட்டிலிருந்து தளர்வதாகவே கருதப்படும்.
எனவே மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுகோரியுள்ளார் கருணாநிதி.
ஜெ. எதிர்ப்பு: நெய்வேலி அணல் மின் நிலைய பங்குகளில் 10 சதவீதத்தைத்தனியாருக்கு விற்கும் முடிவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம்தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய அலுமினியக் கழகம் மற்றும் என்எல்சி நிறுவனங்களில் 10 சதவீதம்பங்குகளைத் தனியாருக்கு விற்பது என மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவுகடுமையான கண்டனத்துக்குரியது.
இதுவரை சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களின்ஆதாரத்தையே அழிப்பதாக அரசின் முடிவு அமையும்.
லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்றுஜக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தேசிய குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இக் கூட்டணியில் திமுகவும் இடம் பெற்றுள்ளது. என்எல்சி பங்குகளை தனியாரிடம்வழங்கும் முடிவு பொதுச் செயல் திட்டத்துக்கு எதிரானதாகும்.
இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசுகைவிட வேண்டும். இதுபோல பங்குகளை விற்றால், பொதுத் துறை நிறுவனங்களில்தனியார் துறை நுழைய வழிவகுப்பதாக அமைந்துவிடும்.
பல லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications