குடிநீர் குழாயில் உடைப்பு: சிமென்ட் மூடி பறந்து தாக்கியதில் சிறுவன் பலி!
ஈரோடு:
ஈரோடு அருகே சித்தோடு என்ற இடத்தில் கூட்டுக் குடிநீர் குழாயில் பெரும் உடைப்புஏற்பட்டு, தண்ணீர் வேகமாக பீய்ச்சி அடித்ததில், அதன் மீது வைத்திருந்த சிமென்ட்பலகை தூக்கி வீசப்பட்டு மாணவர் மீது விழுந்தது. இதில் அவர் அந்த இடத்திலேயேபலியானார்.
ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து திருப்பூருக்கு குடிநீர் கொண்டுசெல்லப்படுகிறது. இதற்காக பவானியிலிருந்து சித்தோடு வழியாக திருப்பூருக்குராட்சத குழாய்கள அமைக்கப்பட்டுள்ளன.இந்தக் குழாய்களில் ஆங்காங்கே தண்ணீர் திறப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றை மூட சிமென்ட் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் சித்தோடு அருகே உள்ள ஒரு திறப்பான் உடைந்தது. அதிலிருந்துபனை மர உயரத்திற்கு தண்ணீர் அதி வேகமாக பீய்ச்சி அடித்தது.
இதில் அதை மூடியிருந்த சிமென்ட் பலகை தூக்கி வீசப்பட்டது. தூக்கி வீசப்பட்டஇந்தப் பலகை, சதீஷ் என்ற 15 வயது மாணவன் மீது படு வேகத்தில் வந்து விழுந்தது.
இதில் அந்த இடத்திலேயே அவர் பலியானார். சுமார் ஒன்றரை மணி நேரம் தண்ணீர்பீய்ச்சி அடித்தது. நீண்ட தாமதத்திற்குப் பின்னரே குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்வந்து திறப்பானை மூட நடவடிக்கை எடுத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications