ஆசிரமத்தில் பிரேமானந்தா: 6 நாள் பரோல்
திருச்சி:
செக்ஸ் சாமியார் பிரேமானந்தா 6 நாள் பரோலில் செல்ல கடலூர் சிறை நிர்வாகம்அனுமதி அளித்தது. இதையடுத்து திருச்சி அருகே உள்ள தனது ஆசிரமத்திற்குபோலீஸ் காவலுடன் சென்றார் பிரேமானந்தா.
திருச்சி அருகே பாத்திமா நகரில் பிரேமானந்தாவின் ஆசிரமம் உள்ளது. இங்கு இவரதுசகோதரி வினாயகசவுந்தரி உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர்.
![]() |
| பிரேமானந்தா... அப்போ |
இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது,ரவி என்பவரைக் கொலை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில்தொடரப்பட்ட வழக்குகளில் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டு அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரேமானந்தா சிறைக்குச் சென்ற பின்னரும் கூட ஆசிரமம் தொடர்ந்து நடந்துவருகிறது. இங்கு பள்ளிக் கூடம் ஒன்றும் உள்ளது.பல வெளிநாட்டு பக்தர்களும்,பெரும்பாலும் பெண்கள், இந்த ஆசிரமத்துக்கு வந்து தங்கிச் செல்கின்றனர்.
இங்கு தங்கியுள்ள பிரேமானந்தாவின் சகோதரி வினாயக சவுந்தரிக்கு உடல் நலம்பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரேமானந்தாவுக்கு தெரிவிக்கப்பட்டது.
![]() |
| பிரேமானந்தா... இப்போ |
தனது சகோதரியைக் காண பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சிறைநிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தார் பிரேமானந்தா.
அதைப் பரிசீலித்த சிறை நிர்வாகம், பிரேமானந்தா 6 நாள் பரோலில் செல்ல அனுமதிஅளித்தனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரேமானந்தா மாலைபாத்திமா நகர் ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு பூஜை நடத்திய பிரேமானந்தாவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுபக்தர்களும் ஏராளமான அளவில் சந்தித்து ஆசி வாங்கினர்.














Click it and Unblock the Notifications