அதிரடிப்படை கற்பழிப்புகள்-முத்துலட்சுமி உருக்கம்
சென்னை:
அதிரடிப்படையினரால் சித்தவதை, கற்பழிப்பு என பலவித கொடுமைகளை சந்தித்த பழங்குடி மக்களுக்கு ஒருநிவாரணமும் கடைக்கவில்லை என வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறினார்.
சித்திரவதை கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி சென்னை எத்திராஜ் கல்லூரியின் மனித உரிமைத் துறையின் சார்பில் நடந்த கலந்துரையாடலில்முத்துலட்சுமி கலந்து கொண்டு பேசினார்.அவர் கூறியதாவது:
என் கணவர் தவறு செய்தார், அவருக்கு தண்டனை தந்தீர்கள். ஆனால், எந்தத் தவறும் செய்யாத நாங்கள் ஏன்பாதிக்கப்பட வேண்டும். காடுகளில் வாழும் அப்பாவி பழங்குடியினர் என்ன தவறு செய்தார்கள்.
அவர்களை சித்தவதை, கற்பழிப்பு என அதிரடிப்படையினர் படாதபாடு படுத்திவிட்டார்கள். என் மீதும்தொடர்ந்து வழக்குகள் போட்டார்கள். வீரப்பனின் அண்ணன் 18 வருடமாய் சிறையில் இருக்கிறார். வீரப்பனின்தம்பியை கர்நாடக அதிரடிப்படை விஷம் வைத்து கொன்றுவிட்டது.
வீரப்பனின் அண்ணன் மகன் ஒரு வக்கீல். அவரையும் விபத்து என்ற பெயரில் சென்னையில் ரோட்டில் வைத்துகொன்றுவிட்டார்கள்.
என் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கக் கூட அனுமதி மறுத்தார்கள். பெண்களை கற்பழித்த போலீசாருக்குபதவி உயர்வு, வீட்டு மனை, பரிசு கொடுத்தார்கள். ஆனால், அவர்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கும்,கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கும் இன்னும் ஒரு நிவாரணமும் வந்து சேரவில்லை என்றார் முத்துலட்சுமி.
தனது பேச்சின்போது அவ்வப்போது கண் கலங்கினார் முத்துலட்சுமி.












Click it and Unblock the Notifications