நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்-ராமதாஸ்
லக்னெள:
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ராணுவம், நீதித்துறை, விளையாட்டுத் துறை மற்றும் மீடியாவிலும் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
லக்னெளவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ராணுவம், நீதித்துறை, விளையாட்டுத் துறை மற்றும் பத்திரிக்கைத்துறையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தால் அதை பாமக ஆதரிக்கும். இந்த இட ஒதுக்கீட்டைப் பெற பிற்பட்ட மக்களுக்குஅரசியல் சட்டரீதியாக உரிமை உண்டு.
51 வருடமாக பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளை தடுத்துவிட்டார்கள். அதை போராடித் தான் பெறவேண்டியுள்ளது.
வரும் ஜூலை 2ம் தேதி பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சமூக நீதி என்ற கருத்தரங்களை பாமக டெல்லியில்நடத்துகிறது. இதில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பங்கேற்கிறார்.
அதில் உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டை உடனே கொண்டு வருமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம். இதுதொடர்பான சட்ட மசோதாவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்என்றார்.
பின்னர் முலாயம் சிங்கையும் ராமதாஸ் சந்தித்தார்.












Click it and Unblock the Notifications