டிஜிபியின் குறை தீர்ப்பு முகாம்: சேராத போலீஸ் கூட்டம்!
சென்னை:
சென்னையில் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த காவல்துறையினர் குறை தீர்ப்பு முகாம்நிகழ்ச்சியில் மொத்தமே 58 போலீஸார்தான் குறைகளைக் கூற வந்தனர்.
தமிழகம் முழுவதும் சாதாரண காவலர் முதல் எஸ்.பி. வரையிலானகாவல்துறையினரின் குறைகளை கேட்டு சரி செய்ய டிஜிபி முகர்ஜி முகாமுக்குஏற்பாடு செய்திருந்தார்.முதல் கட்டமாக வடக்கு மண்டலத்தை சேர்ந்த காவல்துறையினரின் குறைகள் கேட்புநகழ்ச்சி நடந்தது.
டிஜிபி அலுவலகத்தில் நடந்த இந் நிகழ்ச்சியில் மொத்தம் 58 போலீஸார்தான் கலந்துகொண்டனர். கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டனர்.
அதிக அளவில போலீஸார் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 58 பேர்மட்டுமே வந்ததால் டிஜிபி அலுவலகம் ஏமாற்றம் அடைந்தது.
ஊதிய முரண்பாடு, தண்டனை ரத்து, மருத்துவ உதவித் தொகை, பதவி உயர்வுஉள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து டிஜிபியிடம் போலீஸார் தங்களது கோரிக்கைகளைத்தெரிவித்தனர்.
இன்று மத்திய மண்டல போலீஸாரிடம் டிஜிபி குறைகள் கேட்கிறார். தொடர்ந்து தென்மண்டலம், மேற்கு மண்டல போலீஸாரிடம் குறை கேட்கிறார்.
வெள்ளிக்கிழமை சென்னை நகர காவல்துறையினரிடம் குறை கேட்கும் நிகழ்ச்சிநடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications