தாயத்து வெடித்தது!!: மாணவன் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சாலையில் கிடந்த தாயத்தை எடுத்துப் பார்த்தசிறுவன், அந்த தாயத்து வெடித்ததால் படுகாயம் அடைந்தான.
சாத்தூர் அருகே உள்ள சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின்மகன் ஜான். 13 வயதாகும் ஜான் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.இவன் சாலையில் கிடந்த தாயத்து ஒன்றை எடுத்துப் பார்த்து அதைப் பிரிக்கமுயன்றுள்ளான். அப்போது அது திடீரென வெடித்தது.
இதில் ஜான் படுகாயம் அடைந்தான். உடனடியாக அவனை சிகிச்சைக்காக மதுரைராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சிறுவன் எடுத்த பொருள் தாயத்தா அல்லது துப்பாக்கித் தோட்டாவா என்பது குறித்துபோலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications