மதுரை மண்ணின் அமெரிக்க பயணம்
மதுரை:
மதுரை காந்தி அருங்காட்சியகத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் அமெரிக்காவுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் பகுதியில், சர்வதே கலாச்சாரப் பூங்காஅமைக்கப்பட்டுள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட நாடுகளின் கலாச்சாரங்கள்,இனங்களை பிரதிபலிக்கும் வகையில் தனித்தனி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தற்போது இந்தியாவுக்கான கலாச்சாரப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. வருகிறஅக்டோபர் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த தினத்தன்று இப்பூங்கா திறந்துவைக்கப்படவுள்ளது.
பூங்காவின் மையத்தில் 10 அடி உயர மகாத்மாவின் சிலையும் நிறுவப்படுகிறது.மகாத்மா காந்தி சிலை வைக்கும் இடத்தில், இந்திய மண்ணை வைக்க முடிவுசெய்யப்பட்டது.
அப்போது காந்தியடிகள் தனது ஆடையைத் துறந்த அரை நிர்வாண கோலத்திற்குமாறிய மதுரையிலிருந்து மண் எடுத்து வந்து வைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து கிளீவ்லேண்ட் அமைதி கலாச்சார பூங்காவின் ஒருங்கிணைப்பாளரானவெங்கி வெங்கடேஷ், மதுரை வந்தார். காந்தி அருங்காட்சிகயத்தில் மண்சேகரிக்கப்பட்டு அதை அவர் பெற்றுக் கொண்டார்.
காந்தியடிகளின் அஸ்தியின் ஒரு பகுதி இங்க வைக்கப்பட்டிருப்பதால்அருங்காட்சியகத்திலிருந்து மண் சேகரிக்கப்பட்டதாக வெங்கடேஷ் தெரிவித்தார்.
மண் சேகரிப்பு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மண்எடுத்துக் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications