ரீகல் சொட்டு நீலம் நிறுவனர் மனைவி, பேத்தியுடன் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கோவை:

ரீகல் சொட்டு நீலம் நிறுவனர் தனது 2வது மனைவி மற்றும் பேத்தியுடன் தற்கெலை செய்து கொண்டார்.

கோவை ஆர்எஸ் புரம் மேற்கு பாஷ்யகாரலு ரோட்டில் வசித்து வந்த முருகேசன் (65), இவருக்கு 2 மகன், 2மகள் உள்ளனர். இவரது முதல் மனைவி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இவரது 2வது மனைவி பானு (45), இருவரும் பாஷ்யகாரலு ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.இவர்களுடன் பானுவின் பேத்தி ரம்யாவும் (7) இருந்து வந்தார்.

முருகேசன் பிரபல ரீகல் சொட்டு நீலம் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். அந்த நிறுவனத்தை தற்போது மகன்கள்நடத்தி வருகின்றனர். முருகேசன் தனியாக சீயரா என்ற பெயரில் கிளீனிங் பவுடர், பினாயில் தயாரிப்புநிறுவனத்தை நடத்தி வந்தார்.

முருகேசனின் வீடு இன்று காலை வெகு நேரமாகியும் திறக்கப்படாமல் கிடந்தது. அக்கம் பக்கத்தினர் ஆர்எஸ்புரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அங்கு வந்த போலீசார் முருகேசனின் வீட்டுக்குள் சென்றனர்.

அங்கு பானு பேனில் தூக்கு போட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். முருகேசன், குழந்தை ரம்யாஆகியோர் விட்டத்தின் கொக்கியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.

ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதை போலீசாருக்கு முருகேசன் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில்எனக்கு தொழிலில் அதிக நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. கடன் சுமையை சமாளிக்க முடியவில்லை. எனக்கு வரும்செக்குகளும் ரிட்டர்ன் ஆகிவிடுகிறது. கடன் தொல்லையாலும், தொழில் நடஷ்டத்தாலும் இந்த முடிவை நாங்கள்மூவரும் சேர்ந்து எடுத்துள்ளோம். இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை.

மேலும் எங்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என எழுதப்பட்டு இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+