மோசமான வானிலையால் டிஸ்கவரி பயணம் தொடர்ந்து தள்ளிவைப்பு
புளோரிடா:
மோசமான வானிலை காரணமாக டிஸ்கவரி விண்வெளி ஓடத்தை செலுத்துவதுஇரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விண்ணில் பறக்க தயார் நிலையில்டிஸ்கவரி கடந்த இரு நாட்களாக லாஞ்ச் பேடில் காத்துக் கொண்டிருக்கிறது.
நேற்று டிஸ்கவரி விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. இந்திய நேரப்படிசனிக்கிழமை மாலை 3.49 மணிக்கு டிஸ்கவரி ஏவப்படவிருந்தது. இதற்கானஅனைத்து ஏற்பாடுகளும் கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் செய்து முடிக்கப்பட்டுவிட்ட நிலையில், திடீரென வானிலை மோசமடைந்தது.லேசான மின்னலும், இடியும் இருந்ததால் டிஸ்கவரி ஏவப்படுவது தள்ளிவைக்கப்பட்டது. கவுண்ட்டவுன் மாலை 3.41 மணிக்கு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 3.26 மணிக்கு மீண்டும் டிஸ்கவரியை ஏவதிட்டமிடப்பட்டது. ஆனால், மீண்டும் மோசமான வானிலை காரணமாக இந்தத்திட்டம் கைவிடப்பட்டது.
![]() |
மொத்தம் 12 நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள டிஸ்கவரி கட்டப்பட்டு வரும்சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்துச்செல்கிறது.
மேலும் விண்ணை சுற்றி வரும் ஹப்பிள் டெலக்கோப்பில் சில பழுது பார்க்கும்வேலைகளையும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
டிஸ்கவரி பயண குழுவில் இடம் பெற்றுள்ள பியர்ஸ் செல்லர்ஸ், மைக் போசம்ஆகியோர் இரண்டு முறை விண்ணில் நடக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications