முன் ஜாமீன் கோரி எஸ். எஸ்.சந்திரன் மனு
மதுரை:
வரதட்சணைக் கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக எம்.பி.யும்,நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன், முன் ஜாமீன கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது தம்பி மகன் தனசேகரனின் மனைவி லதாவை வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்தியதாக மதுரை போலீஸில் எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்டோர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தனசேகரன் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட விட்டார்.எஸ்.எஸ்.சந்திரன் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் முயன்றுவருகின்றனர்.
இந் நிலையில், நேற்று எஸ்.எஸ்.சந்திரன் நீதிமன்றத்தில் சரணடையக் கூடும் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சரணடையவில்லை.
மாறாக முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், எஸ்.எஸ்.சந்திரன்சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நான் அப்பாவி. எனக்கும், புகார் கொடுத்துள்ள லதாவுக்கும் சம்பந்தம்இல்லை. தற்போது நான் எம்.பியாக உள்ளேன். என் மீது பொய் வழக்கைபோட்டுள்ளனர். நான் சென்னையில் தான் நிரந்தரமாக தங்கியுள்ளேன்.
எங்கும் ஓடி விட மாட்டேன். முன் ஜாமீன் அளித்தால் நீதிமன்றம் பிறப்பிக்கும்நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்றுகூறியுள்ளா எஸ்.எஸ்.
இதேபோல அவரது மகள் கண்மணியும் முன் ஜாமீன் கோரியுள்ளார். இவர்களதுமனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.












Click it and Unblock the Notifications