மீனாட்சி-போலீசின் மாமனார் வீடு டெக்னிக்

Subscribe to Oneindia Tamil

குளித்தலை:

ஆசிரியை மீனாட்சியைக் கொலை செய்தவர்களைப் பிடிக்க சிபிசிஐடி போலீசார்மாமனார் வீடு டெக்னிக்கை பயன்படுத்தியுள்ளனர்.

மீனாட்சி காணாமல் போய் 20 மாதங்களாக எந்த ஒரு தகவலும் கிடைக்காததால்சிபிசிஐடி போலீசார் புதிய யுத்திகளை கையாண்டார்கள்.

இதற்காக குளித்தலை பகுதியை பற்றி நன்கு அறிந்த போலீஸ் அதிகாரிகளின்பட்டியலை தயாரித்தனர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி குளித்தலை பகுதியை சேர்ந்தஒரு கிராமத்தில் திருமணம் செய்திருப்பது தெரியவந்தது.

எனவே அவரையும் சிபிசிஐடி பிரிவில் சேர்த்து களத்தில் இறக்கிவிட்டனர். அவர்சுமார் ஒரு மாத காலம் மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்தார். ஓய்வுக்காக மாமனார்வீட்டுக்கு வந்துள்ளவர் போல நடந்து கொண்டார்.

அப்படியே ஊருக்குள் மிக ரகசியமாக விசாரணையிலும் இறங்கினார். மாமனார்வீட்டில் இருந்தவாரே அவரது ரகசிய விசாரணை நடந்தது.

ஒயின் ஷாப்களுக்குப் போவது, கள்ளச் சாராய கும்பல்களிடம் பழகுவது, அந்தஏரியா ரெளடிகளிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு பேசுவது என அந்த போலீஸ்அதிகாரியின் விசாரணை நடந்தது.

அப்போது அவருக்கு சில முக்கியமான தகவல்கள் கிடைத்தன. இப்போதுகைதாகியுள்ள சண்முகவேலு மற்றும் குமாரின் நடவடிக்கைகள் குறித்து சிலர் சந்தேகம்தெரிவித்தனர். இவர்களிடம் திடீரென பணப் புழக்கம் உள்ளதாகவும் (மீனாட்சியின்நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்று கிடைத்த பணம்) தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்களை குறி வைத்தார் அந்த அதிகாரி. இருவரையும் உளவுப் பிரிவுபோலீசாரையும் விட்டு தீவிரமாக கண்காணித்தார். இவர்களைப் பிடித்து விசாரிக்கதிட்டமிட்ட நிலையில் தான், வாழைக்கு குழி வெட்டியபோது மீனாட்சியின் எலும்புகூடும் சிக்கியது.

இதையடுத்து இந்த இருவரையும் போலீசார் பிடித்து தங்கள் ஸ்டைலில்விசாரித்தபோது எல்லா உண்மைகளையும் கக்கிவிட்டனர். அதன் பின்னரே அவர்கள்இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+